முக்கியமான மேட்டர்!!!
பத்திரிகை, மொழித் துறைகளில் நீண்ட காலமாக இயங்கிவரும் என் நண்பர் செ.ச. செந்தில்நாதன் பதிப்பாளராகியிருக்கிறார். பல சுவாரஸ்யமான திட்டங்களுடன் அவர் தொடங்கியிருக்கும் ஆழி பதிப்பகம் நாளை எட்டு புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. எனது இந்தப் பதிவை இந்தப் புத்தகங்களின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழாக எடுத்துக்கொண்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைக்கிறேன்! பெரியவர்கள் எல்லாம் வருகிறார்கள். நிறைய மேட்டர்களை எதிர்பார்க்கலாம்.
நாள்: 06-01-2008 (ஞாயிறு)
நேரம்: மாலை 5.30
இடம்: டான் பாஸ்கோ ஹால்,
சிட்டாடல் (சிகா)
45, லேன்டர்ன்ஸ் ரோடு
(ஈகா தியேட்டர் அருகில், டெய்லர்ஸ் சாலை திருப்பத்தில்)
கீழ்ப்பாக்கம், சென்னை - 10.
அந்த எட்டுப் புத்தகங்கள்:
தீண்டப்படாத நூல்கள்
- ஸ்டாலின் ராஜாங்கம்
வெளியிடுபவர்: தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி; பெறுபவர்: க. பஞ்சாங்கம், தமிழ் இலக்கிய ஆய்வாளர்
எசப்பாட்டு
- ஆனந்த் நடராஜன்
வெளியிடுபவர்: கவிஞர் கனிமொழி; பெறுபவர்: குஷ்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (ஒளிநூலாகவும் அச்சு வடிவத்திலும்)
- கல்யாண்ஜி
வெளியிடுபவர்: வண்ணநிலவன், எழுத்தாளர்; பெறுபவர்: ராம், இயக்குநர்
காஷ்மீர்
- சந்திரன்
வெளியிடுபவர்: இராசேந்திர சோழன், ஆசிரியர்: மண்மொழி
பெறுபவர்: அஜிதா, வழக்கறிஞர்
முட்டம்
- சிறில் அலெக்ஸ் (நம்மவர்தான்)
வெளியிடுபவர்: ஆனந்த் நடராஜன்
பெறுபவர்: செழியன், ஒளிப்பதிவாளர்
கொதிக்கும் பூமி
- ஆதி வள்ளியப்பன்
வெளியிடுபவர்: எஸ்.ஆர். ரமணன், இயக்குநர், புயல் எச்சரிக்கை தகவல் மையம்
பெறுபவர்: சுதீர் செல்லராஜன், மானிடவியல் மற்றும் சமூகவியல் துறை, ஐ.ஐ.டி., சென்னை
ரஷோமான்
- அகிரா குரோசாவா
தொகுப்பு: தி.சு. சதாசிவம்
வெளியிடுபவர்: நாகா, இயக்குநர்; பெறுபவர்: பி. தனபால், சிஇஓ, மின்வெளி
மேன்ஷன் கவிதைகள்
- பவுத்த அய்யனார்
வெளியிடுபவர்: தமிழச்சி, கவிஞர்; பெறுபவர்: அருண் வெற்றிவேல், எழுத்தாளர்
புத்தகங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் (விலை, பக்க எண்ணிக்கை, பிளர்ப்…) அழைப்பிதழில் இருக்கின்றன. அழைப்பிதழை பி.டி.எஃப். வடிவில் இங்கிருந்து இறக்கிக்கொள்ளலாம்.
